SOURCE :- INDIAN EXPRESS
மலையாள நடிகை ஸ்வாசிகா தமிழ் சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப்பை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரின் திருமணத்துக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
மலையாள நடிகை ஸ்வாசிகா மற்றும்தமிழ் சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பிரமாண்ட முறையில் நடைபெற்ற திருமணத்தில் தமிழ், மலையாளம் டிவி சீரியல் பிரபலங்கள் பலரரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் சினிமா உலகில் வைகை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஸ்வாசிகா. இதைத் தொடர்ந்து கோரிபாளையம், சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஸ்வாசிகா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், 25-க்கும் மேல் மலையாள திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஸ்வாசிகா பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், மலையாள டிவி சிரியல்கள் மூலம்தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். டிவி சீரியல்கள் வழியாக பிரபலமான நடிகை ஸ்வாசிகாவுக்கு ஏராளமான மலையாள டிவி சீரியல் ரசிகர்கள் உள்ளனர்.
டிவி சீரியலில் பிஸியாக இருந்த நடிகை ஸ்வாசிகா, தமிழ் சின்னத்திரை நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவரை காதலித்து வந்த நிலையில், அண்மையில் இருவருக்கும் ஆடம்பரமாக திருமணம் நடந்துள்ளது.
தமிழ் சின்னத்திரை நடிகர் பிரேம் ஜேக்கப், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஸ்வாசிகா – பிரேம் தம்பதியின் திருமணத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, திலீப், ஸ்வேதா, அணு ஸ்ரீ உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ஸ்வாசிகா – பிரேம் ஜோடி தங்கள் திருமணத்துக்கு பிறகு, நண்பர்களுக்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. காதல் திருமணம் செய்துகொண்ட ஸ்வாசிகா – பிரேம் ஜோடிக்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்ன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS