Home தேசிய national tamil NEET UG 2024: நீட் தேர்வில் மூன்று சுற்றுகளாக விடை அளித்தேன்; டாப்பர் டிப்ஸ்

NEET UG 2024: நீட் தேர்வில் மூன்று சுற்றுகளாக விடை அளித்தேன்; டாப்பர் டிப்ஸ்

1
0

SOURCE :- INDIAN EXPRESS

Mridusmita Deka

Advertisment

NEET UG 2024: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2023 இல் 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 50-வது இடத்தைப் பிடித்தார் கமலேஷ் சைனி. இப்போது புதுதில்லியில் உள்ள எய்ம்ஸில் (AIIMS) எம்.பி.பி.எஸ் MBBS படித்து வருகிறார்.

ஆங்கிலத்தில் படிக்க: NEET UG Toppers’ Tips: ‘I made mind maps and prepared flow charts’

18 வயதான கமலேஷ் சைனி 2021 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதினார், ஆனால் கோவிட் -19 காரணமாக வாரியம் அவற்றை ரத்து செய்து, மாற்று மதிப்பீடுகளின் அடிப்படையில் முடிவுகளை அறிவித்தது. கமலேஷ் சைனி நன்கு தயாராக இருந்ததால் அவர் எவ்வளவு மதிப்பெண் பெறுவார் என்பதை சரிபார்க்க விரும்பினார். கொரோனா நிலைமை மேம்பட்டு, வாரியம் அனுமதித்த பிறகு, கமலேஷ் சைனி இதற்காக 2021 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதி 695/ 700 மதிப்பெண்களைப் பெற்றார். கமலேஷ் சைனி ராஜஸ்தான் வாரியத்திலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதினார்.

இருப்பினும், அவருக்கு 15 வயதாக இருந்ததால், அதே ஆண்டு நீட் தேர்வு எழுத முடியவில்லை. நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆண்டுகள். இந்த ஜெய்ப்பூர் சிறுவனான கமலேஷ் சைனி ஒரு பிரகாசமான மாணவர் மற்றும் நேரடியாக 2 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்புக்கு உயர்த்தப்பட்டவர்.

பள்ளியில் படிக்கும்போதே எம்.பி.பி.எஸ் படித்து டாக்டராக வேண்டும் என்று முடிவு செய்ததாக கமலேஷ் சைனி கூறினார். சமூகத்தில் மருத்துவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை வேறு எந்தத் தொழிலுக்கும் நிகரற்றது என்றும் கூறினார். அவர் குடும்பத்தில் மருத்துவராக வரும் முதல் நபர் கமலேஷ் சைனி. மருத்துவப் படிப்பின் பின்னணியில் உள்ள அவரது உந்துதல் பின்தங்கியவர்களுக்கு உதவுவதும் அவரது குடும்பத்தின் நிலையை மேம்படுத்துவதும் ஆகும்.

indianexpress.com உடன் பேசிய கமலேஷ் சைனி, தான் நீட் தேர்வுக்கு எப்படி தயாரானார் என்பதை பகிர்ந்து கொண்டார்.

நீட் தேர்வுக்கு நீங்கள் எவ்வாறு தயாராகினீர்கள்?

நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது எனது நீட் தயாரிப்பு தொடங்கியது. ஜெய்ப்பூரில் உள்ள ஒரு உள்ளூர் நிறுவனத்தில் ஆஃப்லைன் வகுப்பறை பயிற்சி திட்டத்தில் சேர்ந்தேன்.
நான் முக்கியமாக பயிற்சிப் புத்தகங்களில் கவனம் செலுத்தினேன் மற்றும் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தைப் பின்பற்றினேன். 2021 இல் எனது போர்டு தேர்வுகள் முடிந்த பிறகு, நான் NCERT புத்தகங்களை படித்தேன். கடந்த சில மாதங்களில், பயிற்சி நிறுவனம் கொடுத்த தேர்வு தொகுதிகளை எடுத்துக்கொண்டேன்.

எல்லா பாடங்களுக்கும் நான் குறிப்புகள் எழுதவில்லை. இருப்பினும், நான் மன வரைபடங்களை உருவாக்கி, சரியான அட்டவணையை தயார் செய்தேன். நான் ஒரு பக்கத்தில் அத்தியாயங்களின் பெயர்களை எழுதி, தலைப்புகள் மற்றும் துணை தலைப்புகளை ஒரு விளக்கப்படத்தில் எழுதினேன்.

எனது மாதிரித் தேர்வுகளில் செய்த தவறுகளைக் குறைத்துக் கொள்வதை உறுதி செய்தேன். குறிப்பிட்ட நேரத்துக்குப் பழகி, தேர்வு எழுத திறமையும் செயல்திறனும் தேவை. நான் மூன்று மணி நேரத்திற்குள் தேர்வை முடிப்பதை உறுதிசெய்து, குறைந்தபட்சம் மூன்று சுற்றுகளில் வினாத்தாளை முயற்சித்தேன்.

நீட் வினாத்தாளை எப்படி அணுகினீர்கள்?

நான் மூன்று சுற்றுகளில் நீட் வினாத்தாளை முயற்சித்தேன். முதல் சுற்றில், சூத்திரங்கள் அல்லது கற்றலை சார்ந்து இருக்கும் எளிதான கோட்பாட்டு அல்லது எண் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தேன். இரண்டாவது சுற்றில், சில பகுப்பாய்வு திறன்கள் தேவைப்படும் கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். இறுதி மற்றும் கடைசி சுற்றில், முயற்சி செய்யாமல் விடப்பட்ட அந்த சவாலான கேள்விகளுக்கு விடையளித்தேன்.

ராஜஸ்தான் போர்டு மாணவராக இருப்பது ஒரு குறை என்று நினைக்கிறீர்களா? நீட் தேர்வு தயாரிப்புக்காக எல்லாவற்றையும் புதிதாக படிக்க வேண்டி இருந்ததா?

எனது ராஜஸ்தான் போர்டு பின்னணியுடன் நீட் தேர்வுக்கு தயாராவதில் எனக்கு சிரமம் இல்லை. RBSE மற்றும் CBSE க்கு படிப்பு முறையும் பாடத்திட்டமும் முற்றிலும் வேறுபட்டாலும், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் உள்ளிட்ட பாடங்களின் பாடத்திட்டத்தின் முக்கிய அம்சம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. அடிப்படை பொருள் மற்றும் கருத்துக்கள் கூட ஒரே மாதிரியாக இருந்தன. போர்டு தேர்வுக்கும் நீட் பாடத்திட்டத்துக்கும் இடையே பல ஒருங்கிணைப்புகள் இருந்தன.

2024ல் தேர்வு எழுதும் நீட் விண்ணப்பதாரர்களுக்கு நீங்கள் என்ன பரிந்துரைக்கிறீர்கள்?

– உங்கள் மனதில் தெளிவான இலக்கை வைத்துக் கொள்ளுங்கள். டாக்டராக வேண்டும் அல்லது ஏதேனும் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்று உங்கள் இலக்கு தீர்மானிக்கப்பட்டால், அதில் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது

– உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்

– தேர்வு முறையை அறிய மாதிரித் தேர்வுகளை எழுதுங்கள்

– சந்தேகங்களை வந்தவுடன் தெளிவுபடுத்துங்கள்

– மாதிரித் தேர்வுகளில் செய்த தவறுகளை பகுப்பாய்வு செய்யுங்கள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietami

SOURCE : TAMIL INDIAN EXPRESS