SOURCE :- INDIAN EXPRESS
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படம் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தான் அடுத்து நடித்து வரும் வேட்டையன் படத்தின் அப்டேட் குறித்து பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். செந்தில் தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்,ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ரஜினி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மத நல்லிணக்கத்தை வளர்க்கும் விளையாட்டை அடிப்படையாக கொண்ட இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி கதை எழுதியுள்ளார். இந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் இதற்கு நன்றி தெரிவித்தார்.
இதில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “லால் சலாம் திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் படத்தை இயக்கிய ஐஸ்வர்யா (ரஜினிகாந்த் மகள்) படக்குழுவினர் ஆகியோருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளனர். .”
மேலும் “வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் சுமார் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறியுள்ளார். லால் சலாம் படத்திற்கு முன், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது. மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய கேமியோ ரோல்களில் நடித்திருந்தனர்.
தற்போது ரஜினிகாந்த் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS