SOURCE :- INDIAN EXPRESS
தமிழ் மற்றும் கன்னட சின்னத்திரையில் நடிகையாக வலம் வரும் அக்ஷிதா, உதவி இயக்குனருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அக்ஷிதா. சன்டிவியின் அழகு மற்றும் சுமங்கலி சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், அடுத்து கண்ணான கண்ணே சீரியலில் நாயகியின் தங்கையாக நடித்து பிரபலமானார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் சீதாவின் அக்காவாக நடித்திருந்தார். தற்போது அவரின் காட்சிகள் சீரியலில் அதிகம் இடம்பெறவில்லை. அதனைத் தொடர்ந்து, விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இளம் பிஸினஸ் வுமன் மேக்னா கேரக்டரில் நடித்திருந்தார். இவரின் கேரக்டரில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
அதே சமயம் சில எபிசோடுகளில் அவரின் கேரக்டரை கொலை செய்துவிட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுதியது. இதனால் அக்ஷிதா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அக்ஷிதாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அக்ஷிதா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகை அக்ஷிதாவுக்கு ப்ரீத்தம் சுரேஷ் என்பவருடன் நேற்று திடீரென நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கன்னட திரைத்துறையில் உதவி இயக்குனராகவும், எக்ஸிகியூட்டியூ ப்ரொடியூசராகவும் இருக்கும் பிரீத்தம் சுரேஷ் அக்ஷிதா இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமண நிச்சயதார்த்தம் கூர்க் முறைப்படி நடந்துள்ளது.
கூர்க்கில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில், அக்ஷிதா கூர்க் பாரம்பரிய முறையில் புடவை அணிந்திருந்தார். இவர்கள் நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை கன்னட சின்னத்திரையுலம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், மை மேன் என்று அக்ஷிதாவும் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
SOURCE : TAMIL INDIAN EXPRESS